முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தினம்: நினைவுகளை மீட்டெடுக்கும் புத்தளம் மரிக்காரின் அர்த்தமுள்ள கவிதை

Date:

இலங்கையில் COVID-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் முதலாவது ஜனாஸா எரிக்கப்பட்ட தினம் நாளை மார்ச் 31 ஆகும்.

அந்த வேதனையான தினத்தை நினைவுகூரும் வகையில், புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் மரிக்கார் எழுதிய அர்த்தமுள்ள கவிதையை வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

அந்த வேதனையான நாட்கள் இன்றும் மனங்களில் அழியாத வலியாக நிற்கின்றன. மண்ணுக்கு அர்ப்பணிக்க முடியாமல், முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சோதனைகளை கவிஞர் தனது வரிகளில் பதிவு செய்துள்ளார்.

நினைவு கீதம்..!
5 ஆண்டு நிறைவு கீதம்..!!

—-
நெருப்பில் குளித்த
அடையாளம்…
எம் மரணத்தை
எரித்த அவமானம்…!
கருப்பு அதிகாரம்…
நீதியின் நிர்வாணம்…
சடலத்தில் செய்த இனவாதம்…!
###
விதிகளை மாற்றினாய்…
விஞ்ஞானத்தை
கொழுத்தினாய்…
பிறந்த பிஞ்சுகளை
பற்றவைதாய்…
உரிமைகளின்
குரல்வளை கடித்தாய்…!!
###
நெருப்பில் குளித்த
அடையாளம்…
எம் மரணத்தை
எரித்த அவமானம்…!
###
குருதி கொதித்த நாள்…!
எம் கூட்டை சிதைத்த நாள்…!
கட்டாயத் தகனத்தில்…
இலங்கை வரலாறே எரிந்த நாள்…
துஆ செய்ய… தாயின்
சாம்பலை தேடும் நாள்..
###
நெருப்பில் குளித்த
அடையாளம்…
எம் மரணத்தை
எரித்த அவமானம்…!
###
நஞ்சைப் பார்த்தோம்…!
சூரியனே நெஞ்சில் சுட்ட
சூடு உணர்ந்தோம்…!
ஆயிரம் ஆண்டு…
அமைதிச் சமூகம்…
தீயிற்கு
தின்னக் கொடுக்கப்பட்டோம்..!
###
நெருப்பில் குளித்த
அடையாளம்…
மரணத்தை
எரித்த அவமானம்…!
கருப்பு அதிகாரம்…
நீதியின் நிர்வாணம்…
சடலத்தில் செய்த இனவாதம்…!
——–
காலத்தால்…
நிகழ்வுகள் மறந்துபோகலாம்…
நிஜங்கள் புதைந்து போகக்கூடாது…!
வலிகளை நினைவுகூர்வோம்…
இனியேனும் நிகழாதிருக்க…!
இந்த வரலாற்றை பதிவுசெய்வோம்…!!
—-
எழுத்து இயக்கம்,
புத்தளம் மரிக்கார்.
30-03-2025

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...