பணமோசடி தொடர்பில் யோஷித்தவின் பாட்டி டெய்சி கைது…!

Date:

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச சம்பந்தப்பட்ட பணமோசடி விசாரணை தொடர்பாக டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

யோஷிதவின் தாய் வழி பாட்டியான டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க இன்று (05)  வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டதாகவும், கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படு்த்தப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பெப்ரவரி மாத தொடக்கத்தில் சட்டமா அதிபர், யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோருக்கு சொந்தமான ரூ. 59 மில்லியன் கூட்டுக் கணக்கு தொடர்பான பணமோசடி சட்டத்தின் கீழ் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

2016 முதல் நடத்தப்பட்ட விசாரணைகளில் யோஷித ராஜபக்சவினால் நிதி தொடர்பாக முறையான விளக்கங்களை வழங்க முடியவில்லை என்று கண்டறியப்பட்டதை அடுத்து, பணமோசடி சட்டத்தின் கீழ் இருவருக்கும் எதிராக காவல்துறையும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

விசாரணையின்படி, சந்தேகத்துக்குரிய நிதி நிலையான வைப்புத்தொகைகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டுள்ளதுடன், டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்கவுடன் யோசிதவினால் பராமரிக்கப்படும் கூட்டுக் கணக்கிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது  கண்டறியப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...