ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனு மீதான விசாரணையிலிருந்து விலகிய நீதிபதி!

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் உறுப்பினரான நீதியரசர் மேனகா விஜேசுந்தர இன்று (10) குறித்த விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வெற்றிடங்கள் இருக்கும் போது நீதிபதிகளை நியமிக்காததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சிலருக்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனக் டி சில்வா, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உறுப்பினரான நீதிபதி திருமதி மேனகா விஜேசுந்தர இந்த விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதால், அவர் இல்லாத நீதிபதிகள் குழு முன் இந்த மனுவை மே 9 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க இதன்போது உத்தரவிடப்பட்டது.

ஜனாதிபதியின் சட்டத்தரணி சேனக வல்கம்பயவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் வரை மேன்முறையீட்டு நீதிமன்றில் 05 வெற்றிடங்கள் காணப்படுவதாக மனுதாரர் ஜனாதிபதி சட்டத்தரணி மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த நீதித்துறை வெற்றிடங்களை அப்போதைய ஜனாதிபதி நிரப்பத் தவறியதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

 

 

 

 

Popular

More like this
Related

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...