இஸ்ரேலின் இனப்படுகொலைகளை கண்டித்து அமெரிக்க தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

Date:

காசாவில், இஸ்ரேல் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடங்கியுள்ள இனப்படுகொலைகளை கண்டித்து நேற்று (21) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு பலஸ்தீன விடுதலைக்கான இலங்கை இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இனப் படுகொலையை நிறுத்து!’, ‘இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு!’, ‘அமெரிக்கா, நீங்களும் இஸ்ரேலும் இன்று எத்தனை குழந்தைகளைக் கொன்றீர்கள்?’ என்று கோஷமிட்டனர். அதேபோன்று. இஸ்ரேலுக்கு எதிராக வசனங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

பலஸ்தீன சுதந்திரம் என்பது அனைத்து சுதந்திரங்களுடனும் பிணைக்கப்பட்டுள்ளது. பலஸ்தீன மக்களின் போராட்டம் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டமாகும். நாம் அனைவரும் சுதந்திர பலஸ்தீனத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

அதனால்தான் கிழக்கில் நடைபெற்று வரும் சியோனிச சுற்றுலா குடியிருப்புகளை நமது அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். அதனால்தான் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்ப வேண்டாம் என்று எங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...