அனுராதபுரம் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று அடையாள வேலைநிறுத்தம்!

Date:

நாடளாவிய ரீதியில் இன்று (12) வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  தீர்மானித்துள்ளது.

2025 மார்ச் 10, அன்று இரவு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்புணர்வை கண்டித்து இந்த அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, இன்று புதன்கிழமை காலை 8:00 மணி முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்க GMOA வின் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.

மேலும், போராட்டம் நாளை காலை 8:00 மணி வரை நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளில் அமுலில் இருக்கும்.

எனினும், போராட்டத்தினால் அவசர சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படாது.

மேலும், ஆபத்தான நோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் GMOA சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், இந்த வேலைநிறுத்தம் சிறுவர் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், தேசிய மனநல நிறுவனம் மற்றும் இராணுவ மருத்துவமனைகளுக்குப் பொருந்தாது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...