ஒக்டோபர் மாதத்திற்குள் இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம்..!

Date:

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதல் கேபிள் கார் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம்  இரண்டு மலைகளுக்கு இடையே ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு செயல்படும் கேபிள் கார்களில் செல்லும் அரிய வாய்ப்பை  அனுபவிக்க முடியும்.

மத்திய மலைநாட்டில் கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ மலைசிகரத்தில் இருந்து அம்புலுவாவ மத மற்றும் பல்லுயிர் வளாகம் வரை 1.8 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாக கேபிள் கார் திட்டம் வடிவமைக்கப்பட்டவுள்ளது.

இந்த கேபிள் கார் திட்டம் சீன மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களின் கூட்டு முயற்சியாகும். இந்த திட்டத்தின் முதல் கட்டம் இவ் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (24) அம்புலுவாவ திட்டத்தை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்ற இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் அம்புலுவாவ அறக்கட்டளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுராத ஜெயரத்னவை சந்தித்துள்ளார்.

இதன்போது, “இந்த திட்டம் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள் 18 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்திருந்தது. ஒரு கனவாக வெகு தொலைவில் இருந்த இந்த திட்டம்  சீன மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களால் நிஜமாகிவிட்டது.

நுவரெலியாவிற்கு பயணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கம்பளையில் பயணத்தை ஆரம்பித்து அம்புலுவாவவில் கேபிள் கார் பயணத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறும் வகையில், கம்பளை ரயில் நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு கேபிள் கார் சேவை விரிவுபடுத்தப்படும்,” என அநுராத ஜெயரத்ன சீனத் தூதரிடம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...