எரிபொருள் விநியோகஸ்தர்களினால் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்ட மனு..!

Date:

எரிபொருள் விநியோகத்தில் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3% தள்ளுபடியை ரத்து செய்ய இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எடுத்த முடிவால் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்கும் முயற்சியாக மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவானது, எரிபொருள் விநியோக சங்க பிரதிநிதிகள் குழு ஒன்றினால் இன்று (03) ஜனாதிபதி செயலகத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசிய எரிபொருள் விநியோக சங்க பிரதிநிதிகள், இந்த விவகாரத்தை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்து நியாயமான தீர்வை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு முன்னதாகவும் பல அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் மனுவை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவும், இந்த விவகாரத்தைத் தீர்க்க எரிபொருள் வணிக சங்கங்களின் சில பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளைச் செய்யவும் அவர்கள் கோரியுள்ளனர்.

மேலும், சீன பெட்ரோலியம் மற்றும் கெமிக்கல் கார்ப்பரேஷன் (சினோபெக்) மற்றும் இந்தியன் எண்ணெய் நிறுவனம் (ஐஓசி) ஆகியவை எரிபொருள் விநியோகத்திற்காக தங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...