சர்வதேச மனித உரிமை சட்ட விவாத போட்டியில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி ஹொங்கொங் பயணம்

Date:

ஹொங்கொங்கில் இன்று ஆரம்பமாகும் Red Cross International Humanitarian Law Moot-2025இல் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து யாழ்.பல்கலைக்கழக அணி தெரிவாகியுள்ளது.

இந்த அணியின் சார்பில் போட்டியில் கலந்துகொள்வதற்காக சுபாஷினி ருமணன், துலாஞ்சி செனூரிநதி யாப்பா பண்டார, ஹம்னா அஸூர், தேஜாஸ்வினி பிலிப்ஸ், ஆகியோர் ஹொங்கொங் பயணமாகியுள்ளனர்.

2003 ஆம் ஆண்டிலிருந்து ஆசிய பசுபிக் பல்கலைக்கழகங்களுக்கிடையில் இந்த சர்வதேச மனித உரிமை சட்டங்கள் தொடர்பிலான போட்டி ஹொங்கொங்கில் நடைபெற்று வருகின்றது.

ஒவ்வொரு வருடமும் இந்த போட்டியில் உள்ளூரிலும் பிராந்திய ரீதியாகவும் 100க்கும் மேற்பட்ட சட்டபீடங்கள் கலந்து கொள்கின்றன. அவற்றில் 20 அணிகள் சர்வதேச போட்டிக்காக தெரிவு செய்யப்படுகின்றன.

ஹொங்கொங் செஞ்சிலுவை சங்கம் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்தும் இப்போட்டி இன்றிலிருந்து 15 ஆம் திகதி வரை நடைபெறும்.

இப்போட்டியில் நீர்கொழும்பை சேர்ந்த ஹுஸ்னி ஸராப் ஆசிரியரின் புதல்வி  ஹம்னா அஸூர் போட்டியில் வாதிடுபவராக (Mooter) கலந்துகொள்கிறார்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...