இஸ்லாமிய அறிஞர், சமூக செயற்பாட்டாளர் அப்துல் ஹபீஸ் ரஹ்மானி காலமானார்!

Date:

இஸ்லாமிய அறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான மௌலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி அவர்கள் இன்று (25) காலமானார்.

இறை அழைப்பாளர், இலட்சியப் போராளி, ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், பன்னூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், தேர்ந்த நிர்வாகி, இஸ்லாமிய இயக்கத் தலைவர் என்று பன்முக ஆற்றல் பெற்றவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக எல்லோருக்கும் நண்பர் பழகுவதற்கு இனியவர் முந்தைய தலைமுறையின் இஸ்லாமிய இயக்கத் தலைவர்.

வேலூர் இஸ்லாமிக் சென்டரின் முதல்வராக, நிர்வாகியாக திறம்படச் செயலாற்றியவர். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வேலூர் நகரத் தலைவராக, முந்தைய வட ஆற்காடு மாவட்டத் தலைவராக, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினராக, மாநிலச் செயலாளராக பல்வேறு தளங்களில் இடைவிடாமல் இயங்கியவர்.

அவருடைய குடும்பமே இலட்சியக் குடும்பமாக இருக்கின்றது. மகனார் அப்துல் ஹை தாஹா வேலூர் கிளைத் தலைவர். பேரனார் ரைஹான் அகீல் சென்னை மாநகர எஸ்ஐஓ தலைவர். மருமகனார் சிராஜுல் ஹசன் முப்பதாண்டுகளுக்கு மேலாக சமரசம் இதழின் ஆசிரியர்.

சமரசம் இதழோடு அழுத்தமான பந்தம் அவருக்கு இருந்தது. ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். ஏராளமானவற்றை மொழிபெயர்த்துள்ளார்..

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...