தேசபந்துவை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் மூவரடங்கிய சிறப்பு விசாரணை குழு நியமனம்

Date:

சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையில் மூவரடங்கிய சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்புக்குழுவின் இணை உறுப்பினர்களாக நீதியரசர் (ஒய்வுநிலை) எம்.என்.பி.இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் எம்.லலித் ஏக்கநாயக்க அங்கம் வகிக்கின்றனர்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது பதவிக்கான அதிகாரங்கள் மற்றும் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக சபாநாயகரால் இந்த சிறப்பு குழு நேற்றைய தினம் நியமிக்கப்பட்டது. இந்த குழு நேற்றைய தினம் முதல் தடவையாக கூடி கலந்துரையாடியுள்ளது. இந்த குழு வெள்ளிக்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கை முறை) சட்டத்தின் 5ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 3 (ஈ) மற்றும் 3(உ) பிரிவுகளுக்கு அமைய துர்நடத்தை மற்றும் பதவியின் அதிகாரம் மற்றும் தத்துவங்களை பாரதூரமான முறையில் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து ஆராய்வதற்கான சிறப்பு குழுவை அமைக்கும் யோசனை கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தில்  ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...