பஹல்காம் தாக்குதல் தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடிக்கு ரணில் கடிதம்!

Date:

காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதி, ரணில் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, இதை ‘கொடூரமான குற்றம்’ என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் குறிப்பாக உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்ட அவர், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

மேலும், இலங்கையில் மூன்று தசாப்த கால பிரிவினைவாத பயங்கரவாத மோதலையும் நினைவு கூர்ந்த ரணில் விக்ரமசிங்க, அண்மைய பஹல்காம் தாக்குதல் தீவிரவாதத்தின் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை தெளிவாக நினைவூட்டுகின்றது.

அத்துடன், இந்த விடயத்தை ஒருங்கிணைந்த முறையில் கவனிக்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...