ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வருகைத்தந்த யாத்திரிகர்களின் கைவிடப்பட்ட பொதிகளை ஒப்படைக்க விசேட திட்டம்!

Date:

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் புத்தரின் தந்த தாது காட்சிப்படுத்தப்பட்ட “ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற யாத்திரிகர்களின் பொதிகள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு, பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை இன்னும் திருப்பி எடுத்துச் செல்லப்படாத பொதிகளை உரிய யாத்திரிகர்களிடம் ஒப்படைப்பதற்காக சிவில் பாதுகாப்புத் துறையானது திட்ட முறையொன்றை  கொண்டுவரவுள்ளதாக மத்திய மாகாண சபையின் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யாத்திரிகர்களின் பொதிகளை உரிய முறையில் சேகரித்து, பின்னர், அவற்றை பாதுகாப்பாக அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கும் பணியை சிவில் பாதுகாப்புத் துறை அதன் மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தி வருகிறது.

எனினும், சில பொதிகள் மற்றும் ஏனைய உடைமைகள் இதுவரை எவராலும் உரிமை கோரப்படாமல் கைவிடப்பட்டு காணப்படுகின்றன.

இவ்வாறு திருப்பி எடுக்கப்படாத பொதிகளை உரிய யாத்திரிகர்களிடம் ஒப்படைக்க ஒரு முறைமை கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றும் (28) நாளையும் (29) கண்டி ஏரியில் உள்ள ஜோய் படகுச் சேவைத்தளத்துக்கு முன்னால் கைவிடப்பட்ட பொதிகளை உரியவர்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தத்தமது பொதிகளை பெறாதவர்கள் செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையுடன் இந்த இடத்துக்குச் சென்று தங்கள் பொதிகளை பெற்றுக்கொள்ளுமாறு சிவில் பாதுகாப்புத் துறை  கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை பொதுமக்கள் அறியவும் பொதிகளை கையளிப்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவும் 071-580 3000, 077-531 1797 மற்றும்  071-096 5890 ஆகிய தொலைபேசி இலக்கங்களை சிவில் பாதுகாப்புத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...