அதிகாரத்தின் பேரில் நடந்து கொள்ளும் திமிரான செயற்பாடுகள், மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. ஆட்சியாளர்கள் எவ்வாறு சட்டத்தையும், மனிதத் தன்மையையும் புறக்கணித்து பிறர் நிலங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர் என்பதை இந்த ஆக்கத்தினூடாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
அபகரிக்கப்பட்ட நிலம்…
ஆட்சி அதிகாரம் இருக்கும் ஆணவத்தில் மன்னர் அந்த நிலத்தைக் கைப்பற்ற ஆணையிட்டார்.
நிலம் அபகரிக்கப்பட்டது. கிழவி வெளியேற்றப்பட்டாள். அபகரிக்கப்பட்ட நிலத்தில் மன்னரின் மனம் மகிழும் வண்ணம் மாளிகையும் எழில் மிகுந்த தோட்டமும் உருவாயின. கிழவி நீதிமன்றம் சென்று முறையிட்டாள்.
புதிய மாளிகை திறப்பு விழா.
மன்னருக்கு வியப்பு- இவரை விழாவுக்கு அழைத்தால் கழுதையுடன் வருகிறாரே என்று.
பிறகு மன்னரை நோக்கி, “அரசே, இந்தச் சாக்குப் பையைத் தூக்கிக் கழுதையின் முதுகில் வைக்க உதவுங்கள்” என்றார்.
“அரசே, இந்த ஒரு மூட்டை மண்ணையே உங்களால் தூக்க முடியவில்லையே.
ஓர் ஏழை மூதாட்டியிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகையையும் தோட்டத்தையும் சுமக்கும்படி மறுமையில் இறைவன் கட்டளையிட்டால் என்ன செய்வீர்கள்? எப்படிச் சுமப்பீர்கள்?” நீதிபதி பின்வரும் வேத வசனத்தையும் ஓதிக் காட்டினார்.
“எவர் வஞ்சனை செய்கிறாரோ அவர் மறுமை நாளில் தாம் செய்த வஞ்சனையுடன்தான் வருவார். ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் சம்பாதித்ததற்கான கூலி முழுமையாக வழங்கப்படும். அவர்கள் யார் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.”(குர்ஆன் 3: 161)
மன்னரின் இதயம் இறையச்சத்தால் நடுங்கியது. உடனடியாக அந்த மூதாட்டி அங்கே வரவழைக்கப்பட்டார். மன்னர் கண்ணீருடன் கூறினார்.
“அம்மா..என்னை மன்னித்துவிடுங்கள். இந்த மாளிகை, தோட்டம் அனைத்தும் உங்களுக்கே சொந்தம்.” சற்றே யோசித்துப் பாருங்கள்.
ஆட்சி அதிகாரத் திமிரின் காரணத்தால் இன்று சட்டம் போட்டே மற்றவர்களின் நிலங்களை அபகரிக்கும் ஆட்சியாளர்களின் நிலைமை என்ன ஆகும்? காத்திருக்கிறது இறைவனின் கடும் தண்டனை.