இந்தியா, பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு சவூதியில் நுழைவதற்கான பல்தேவை விசாக்களுக்கு தற்காலிக தடை

Date:

பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு வர்த்தகம், குடும்பம், சுற்றுலா ஆகிய பல்தேவைகளுக்கான விசா வழங்குவதை சவூதி அரேபியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி அல்ஜீரியா, பங்களாதேஷ், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈராக்,ஜோர்டான், மொராக்கோ, நைஜீரியா, பாகிஸ்தான், சூடான், துனிசியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக தடைக்குப் பின்னால் உள்ள பல முக்கிய காரணங்களை சவூதி அரேபியா அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

இதனடிப்படையில் சிலர் பல்தேவை விசாக்களைப் பயன்படுத்தி சவூதி அரேபியாவிற்குள் நுழைந்து ஹஜ் சீசன் வரை சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் இது அதிக போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் ஏற்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வணிக அல்லது குடும்ப வருகை விசாக்களில் நுழையும் பலர் அனுமதியின்றி வேலை செய்வதாகவும் விசா நிபந்தனைகளை மீறுவதுடன் தொழிலாளர் சந்தையில் இடையூறுகளை உருவாக்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஹஜ் சீசனில் பயணத்தை ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளதாக சவூதி வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

விசா விண்ணப்பதாரர்கள் புதிய விதிமுறைகளுக்கு இணங்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதுடன் அவ்வாறு செய்யத் தவறினால் தண்டனை விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விசா கொள்கை விதிகள் சவூதி அரேபியாவின் 2030 தொலைநோக்கு இலக்குகளுடன் ஒத்துப்போகும் வகையில் இந்த புதிய விசாக் கொள்கைகள் அமைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நாடுகளிலிருந்து பல்தேவை விசாக்களில் வருபவர்கள் முறையாக நடந்துகொள்வதைப் பொருத்து இந்த விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும்  அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...