இரு கண்களிலும் பார்வை இழந்த நிலையில் ஜும்ஆ பிரசங்கம் செய்து தன்னுடைய திறமையை உலகுக்கு வெளிப்படுத்திய அஷ்ஷெய்க் அர்கம் ஹசனி!

Date:

காத்தான்குடி செயின் மெளலானா ஜும்மாப் பள்ளிவாயலில் நேற்று(25) (வெள்ளிக்கிழமை) ஜும்ஆப் பேருரை சிறப்பாக நடைபெற்றது.

இரண்டு கண்களும் பார்வையற்ற விஷேட தேவையுடைய அறிஞர் அஷ்ஷெய்க் MJM அர்கம் ஹசனி அவர்கள் இந்த ஜும்ஆப் பயானை நிகழ்த்தி அனைவரையும் ஈர்த்தார்.

மனிதாபிமானம் மற்றும் ஒற்றுமையை மையமாக கொண்டு வழங்கிய அவரது உரை, சிறப்பாகவும் ஆழமாகவும் இருந்தது. பார்வையிழந்திருந்தாலும் உலகத்தை மிக தெளிவாக புரிந்து வைத்திருக்கும் அவரது ஆற்றல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஜும்ஆ முடிவில், அர்கம் ஹசனி அவரை நேரில் சந்தித்த பள்ளிவாயல் நிர்வாகிகள், எதிர்வரும் ஜும்ஆக்களில் போதைவஸ்துக்கள் எதிர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர். இதற்கு அவரும் ஒப்புதல் வழங்கினார்.

இத்தகைய அருமையான ஜும்ஆப் பேருரையை ஏற்பாடு செய்த செயின் மெளலானா பள்ளிவாயல் நிர்வாகத்திற்கு சமூகம் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...