சிங்கள, தமிழ் புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் சிறப்பு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த சிறப்பு ரயில் சேவை இரண்டு கட்டங்களாக இயக்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்து பதுளை, அனுராதபுரம், காலி, கண்டி மற்றும் பெலியத்த ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, புத்தாண்டு முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பும் மக்களுக்காக 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.