ஜனாதிபதி நிதியில் மோசடி: சிஐடி விசாரணை ஆரம்பம்..!

Date:

2008 முதல் 2024 வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிகக் குற்ற விசாரணை பிரிவால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து இந்தப் பணம் பெறப்பட்டது தொடர்பான 22 கோப்புகள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தக் கோப்புகள் தொடர்பாக 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு தொகைகளில் ரூ. 100 மில்லியனுக்கும் மேல் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த பணத்தைப் பெற்றுக் கொள்ளும்போது ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா? என்பதைக் கண்டறியவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பாக ஜனாதிபதி நிதிய கணக்கிலிருந்து வழங்கப்பட்ட காசோலைகளின் விபரங்களைப் பெறுவதற்கான உத்தரவை நேற்று (02) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் இருந்து பெற விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...