உள்ளூராட்சித் தேர்தல்: தபால் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவுறுத்தல்!

Date:

2025 மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கு  தபால் மூல வாக்கைப் பதிவு செய்பவர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை எடுத்துச் செல்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, தேசிய அடையாள அட்டை செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக ஆட்பதிவுத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தகவல் சரிபார்ப்புக் கடிதம்.
பின்வரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் மட்டுமே இடம்பெறும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...