பஹல்காம் தாக்குதல்:சவூதி விஜயத்தை முடித்துக்கொண்டு மோடி இந்தியா விரைவு: விமான நிலையத்தில் அவசர சந்திப்பு!

Date:

இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீரில் பஹல்காம் பிரதேசத்திலுள்ள சுற்றுலாத் தளமான பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து சவூதிக்கான தனது இருநாள் விஜயத்தை பாதியில் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார்.

விமான நிலையத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவை அவசரமாக சந்தித்து பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் அவர் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளிநாட்டு விவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு அமைச்சர் ரஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆகியோரை  உள்ளடக்கிய பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவில்  முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அமெரிக்கா மற்றும் பெரு விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனது விஜயத்தை சுருக்கிக் கொண்டு கலந்து கொள்ளவுள்ளார்.

நேற்று நடைபெற்ற இத்தாக்குதலில் ஜக்கிய அரபு அமீரகம், நேபாளம் பிரஜைகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

2019ஆம் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...