நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு கண்டி ஸ்ரீ தலாதா மாளிகை நிதியுதவி

Date:

நிலநடுக்கத்தால்  பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு கண்டி ஸ்ரீ தலாதா மாளிகை மற்றும் மல்வத்து – அஸ்கிரிய பீடம் ஆகியவை இணைந்து 1.5 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளன.

இந்த நன்கொடை, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் மற்றும் ஸ்ரீ தலாதா மாளிகையின் மதிப்பிற்குரிய தியவதன நிலமே ஆகியோரால் இலங்கையில் உள்ள மியன்மார் தூதரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தால்  உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையிலும், மியன்மார் மக்களின் நல்வாழ்வு மற்றும் மீளெழுச்சிக்கு பிரார்த்தனை செய்யும் வகையிலும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் விசேட வழிபாடுகள் புதன்கிழமை (02) நடைபெற்றன.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் அநுநாயக்க தேரர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் மகா சங்கத்தினருடன், புனித தந்த தாதுவுக்கு அருகில் ஒன்றுகூடி பிரித் ஓதி ஆசீர்வாதங்களை வழங்கினர்.

“ஆழமாக வேரூன்றிய தேரவாத பௌத்த பாரம்பரியத்தைக் கொண்ட நாடான மியன்மாருடன் இலங்கை நீண்டகால மற்றும் நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது.

இந்தப் பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், மியன்மாரில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கண்டி ஸ்ரீ தலாதா மாளிகை மற்றும் மல்வத்து – அஸ்கிரி பீடம் ஆகியவை  இணைந்து 1.5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளன” என ஸ்ரீ தலாதா மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல...

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி:கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல்...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட முகமது சுஹைல் விடுதலை!

சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 9 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளுக்கு எதிர்வரும்...