போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு நாளை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Date:

மறைந்த போப்  பிரான்சிஸின் இறுதிச்சடங்கிற்கான கடைசி நிமிட ஏற்பாடுகளை வத்திகான் இன்று வெள்ளிக்கிழமை (25) முழுவீச்சில் செய்துவருகிறது.

போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்த பெருந்திரளான கூட்டம் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் ஒன்றுகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்குப் போப் ஃபிரான்சிஸின் நல்லுடல் திறந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , உக்ரேனிய ஜனாதிபதி விளாடிமிர் ஸெலென்ஸ்கி உட்பட ஐம்பது நாடுகளின் தலைவர்களும் 10 மன்னர்களும் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நாளை சனிக்கிழ்மை நடைபெறவிருக்கும் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் இன்று  ரோம் சென்றடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது 130 வெளிநாட்டுப் பேராளர்கள் போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வர்.

செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இத்தாலிய, வத்திகான்  அதிகாரிகள் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர். கூடுதல் சோதனைகள் இன்றிரவு இடம்பெறும்.

ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் வரிசையாக மணிக்கணக்காக நின்று போப்  பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இறுதிச்சடங்கு முடிந்து போப்  பிரான்சிஸின் நல்லுடல் அவருக்கு மிகவும் பிடித்தமான ரோமின் சென்டா மரியா மஜியோரே தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படும்.

ஏப்ரல் 27ஆம் திகதியிலிருந்து பொதுமக்கள் போப் ஃபிரான்சிஸின் கல்லறைக்குச் செல்லலாம். அதையடுத்து புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் தொடங்கும்.

80 வயதுக்குக் கீழுள்ளோர் மட்டுமே அடுத்த போப்பைத் தேர்வு செய்ய வாக்களிக்கலாம். தற்போது 135 கார்டினல்கள் அதற்குத் தகுதி பெறுகின்றனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...