மத நல்லிணக்கத்தின் அழகிய தருணம்: பெருநாள் தொழுகைக்கு பின் முஸ்லிம்களுக்கு இனிப்பு, தண்ணீர் வழங்கிய இந்துக்கள்!

Date:

முஸ்லிம்களின் புனித ரமழான் பெருநாள், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் சமூகம் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும்.

இந்த பெருநாளை முன்னிட்டு ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர்.

தொழுகை முடிந்ததும், அங்கு ஏற்பட்ட ஒரு அற்புதமான நிகழ்வு சமூக ஒற்றுமையின் அழகிய தருணமாக அமைந்தது.

பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு, அங்கிருந்த சில இந்து சமூகத்தினரால் குளிர்ந்த தண்ணீரும் இனிப்புக்களும் வழங்கப்பட்டன.

தண்ணீர் பெற்ற முஸ்லிம் சகோதரர்கள் இந்த நற்செயலுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

‘சமூகத்தினருக்குள் ஒற்றுமை இருந்தாலே நாடு இன்னும் உயர்ந்த முறையில் வளர்ச்சி அடையும். மதங்களின் வேறுபாடு இல்லாமல் சகோதரத்துவம் வளர வேண்டியது அவசியம்.

‘இது உண்மையான சகோதரத்துவத்தின் சிறந்த எடுத்துக்காட்டு. வெறும் பண்டிகை கொண்டாட்டமாக அல்ல, ஒற்றுமையை முன்னிறுத்தும் ஒரு நிகழ்வாகவும் இது விளங்குகிறது.

இந்த அழகிய தருணங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பலரும் இதை பகிர்ந்து பாராட்டும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் மத நல்லிணக்கத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் உதாரணமாக அமைகின்றன.

 

 

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...