மாதம்பை இஸ்லாஹிய்யாவில் Ledership and management கற்கை நெறி அங்குரார்ப்பணம்: விங் கொமாண்டர் சிபா ஹனீபா பிரதம அதிதி

Date:

தொழில்நுட்பத்திற்கான இஸ்லாமிய நிறுவனத்தினால் (Islamic Institute of Information Technology – IIIT) மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடாத்தப்படும் (Diploma in Leadership and Management Studies -LMS) 50 நாட்கள் வதிவிட செயலமர்வின் 8ஆம் தொகுதி மாணவர்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு 19ஆம் திகதி சனிக்கிழமை  மாதம்பை இஸ்லாஹிய்யா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் தலைமையுரை மற்றும் வரவேற்புரையை இஸ்லாஹிய்யாவின் முதல்வர் கலாநிதி எம். இஸட். எம். முபீர் (இஸ்லாஹி) “பிள்ளை வளர்ப்பில் தற்கால பெற்றோர்கள் எதிர்நோக்கும் சவால்கள்” எனும் தலைப்பில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து இஸ்லாஹிய்யா மாணவர்கள் தேசிய கீதத்தை இசைத்தனர். இஸ்லாஹிய்யா தொடர்பான வீடியோ காணொளி ஒன்றும் காண்பிக்கப்பட்டது.

TVEC அங்கீகாரம் பெற்ற மாதம்பை IIIT நிறுவனத்தின் தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் டிப்ளோமா (Diploma in Leadership and Management Studies -LMS) கற்கைநெறி தொடர்பான அறிமுகத்தை IIIT மற்றும் இஸ்லாஹிய்யா நிறுவனத்தின் முகாமையாளர் கலாநிதி ஏ. ஏ. எம். ஸாதிக் (இஸ்லாஹி) வழங்கியதுடன் அது தொடர்பான விளக்கங்களையும் தெளிவுபடுத்தினார்.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற இலங்கை விமானப்படை அதிகாரி வீரபுத்ர, தேசமான்ய, வின்க் கொமாண்டரும் Filotex Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமையாளருமான சீபா ஹனீபா அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கு சுவாரஸ்யமான விதத்தில் ஒழுக்கம், பண்பாடு, தலைமைத்துவம் தொடர்பான உரையொன்றையும் நிகழ்த்திச் சென்றார்.

இறுதியாக வருகை தந்த மாணவர்களின் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை இவ் வதிவிட பாடநெறிக்கு இணைத்து கொண்டமை தொடர்பான தங்களது காத்திரமான கருத்துக்களையும் தெரிவித்தனர்.

இவ்வருடம் விஷேடமான, தற்காலத்துக்கு தேவையான பல உள்ளடக்கங்களுடன் வடிவமைக்கப்பட்ட LMS (Diploma in Leadership and Management Studies) கற்கைநெறியில் அறுபதுக்கும் அதிகமான மாணவர்கள் உற்சாகமாக இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் இஸ்லாஹிய்யா விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், கற்கைநெறி மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் விஷேட அதிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...