முழு காசா பிராந்தியமும் பட்டினியின் அகோரப் பிடியில் சிக்கியுள்ளது: ஹமாஸ் அறிவிப்பு

Date:

நவீன வரலாற்றில் மிக மோசமான மனிதாபிமான பேரழிவுகளில் ஒன்றான காசா பகுதி பஞ்சத்தின் கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

மேலும் காசா பகுதியில் உள்ள எங்கள் மக்களுக்கு உடனடியாக கடவைகளைத் திறந்து தண்ணீர் உணவு, மருந்து மற்றும் நிவாரணங்களை  வழங்குமாறு நாங்கள் கோருகிறோம் என ஹமாஸ் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை காசாவில் உள்ள பேக்கரிகள் மூடப்பட்டதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க சிரமப்படுகிறார்கள். இஸ்ரேலிய முற்றுகையால் சமையலுக்கு மா, எரிபொருள் இல்லை. இரண்டு வாரங்களில் உணவு தீர்ந்துவிடும் என்று உலக உணவுத் திட்டம் எச்சரிக்கிறது.

ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்ரேல் காசாவுக்குள் செல்லும் அனைத்து மனிதாபிமான உதவிகளை துண்டித்ததால் உணவு நிலைமை ‘மிகவும் மோசமாக’ உள்ளது என்று ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்ரேல் அனைத்து உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் மனிதாபிமான உதவிகளையும் துண்டித்த பிறகு,விநியோகம் குறைந்து வருவதைக் காரணம் காட்டி, உலக உணவுத் திட்டம் காசாவில் மீதமுள்ள அனைத்து பேக்கரிகளையும் மூடியது.

மனிதாபிமான உதவி இல்லாததால், அதன் பொருட்கள் தீர்ந்து வருவதாகவும், ரொட்டி தயாரிக்கத் தேவையான கோதுமை மா இல்லை என்றும் கிடைக்கக்கூடிய அனைத்து உணவுப் பொருட்களையும் விநியோகித்துள்ளதாகவும்  துரதிர்ஷ்டவசமாக கையிருப்பு இல்லை என்றும் கடுமையான பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் என ஐ.நா. அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...