வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களால் 713 பேர் உயிரிழப்பு

Date:

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 685 வீதி விபத்துகளில் 713 பேர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 744 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வீதி விபத்துகளினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 28ஆக குறைந்துள்ளன.

2024 ஆம் ஆண்டில் சித்திரை புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற 103 வீதி விபத்துகளில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வீதி விபத்துகளினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 23ஆக  குறைவடைந்துள்ளன.

அத்துடன், பதிவான மொத்த வீதி விபத்துகளில், மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிக எண்ணிக்கையை கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விபத்துகளால் இளைஞர்கள் அதிக அளவில் உயிரிழப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டில் 781 மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களும் 194 பாதசாரிகளும் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...