வாக்காளர் அட்டைகள் இன்று தபால் நிலையங்களுக்கு!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று (16) அந்தந்த தபால் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.

அதற்கமைய, ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

இது குறித்து தபால் மாஅதிபர் ருவன் சத்குமார மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு வீட்டிற்கும் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், ஏப்ரல் 29 ஆம் திகதி வரை இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

 

இதற்கான விசேட நாளாக ஏப்ரல் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த முக்கிய ஆவணத்தை கையொப்பம் பெற்று வீட்டில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்பதால் விடுமுறை தினத்தை இதற்காக தெரிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே வீட்டில் உள்ள யாராவது ஒருவர் வீட்டில் தங்கியிருந்து கையொப்பமிட்டு அதைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 29 ஆம் திகதிக்குப் பின் விநியோகிக்கப்படாத வாக்காளர் அட்டைகள் இருக்க வாய்ப்புள்ளது. அவற்றை அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி பெறக்கூடிய வசதியை மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...