‘பெரிய வெள்ளிக்கிழமையை அர்த்தமுள்ளதாக்குவோம் ‘: இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Date:

பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து  இன்று வெள்ளிக்கிழமை  (18)  நீர்கொழும்பு தெல்வத்தை  சந்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘கித்துசர ‘ அமைப்பினரின் ஏற்பாட்டில் ‘பெரிய வெள்ளிக்கிழமையை அர்த்தமுள்ளதாக்குவோம் ‘ என்ற தொனிப் பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

18 மாத காலமாக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டதுடன் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோக பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க, இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மூவின மக்களும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...