ஹஸ்ரத் மௌலானா சையத் முகமது ஆகில் காலமானார்

Date:

உத்திர பிரதேசம் மாநிலம் ஸஹாரன்பூர் மாவட்டம் மத்ரஸா மளாஹிருல் உலூமின் ஷேஃகுல் ஹதீஸ் மௌலானா முஹம்மது ஆகில் மளாஹிரி ஸஹாரன்பூரி (88) ஹழ்ரத் இன்று (28)காலமானார்.

மளாஹிருல் உலூம் ஸஹாரன்பூரிலேயே துவக்கம் முதல் இறுதி வகுப்புவரை பயின்று 1961 முதல் 2025 வரை சுமார் 64 ஆண்டுகள் அங்கேயே துணை ஆசிரியராக, பேராசிரியராக, தலைமை ஆசிரியராக, ஷேகுல் ஹதீஸாக, மதரஸா பொறுப்பாளாராக பல பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

ஷேக் ஜகரிய்யா (ரஹிமஹுல்லாஹ்)அவர்களின் மாணவராகவும் மருமகனாகவும் இருக்கிறார்கள்.

ஷேஃக் ஜகரிய்யா (ரஹிமஹுல்லாஹ்) விடம் இல்முல் ஹதீஸின் இஜாஸத்… தஸவ்வுஃப் தரீக்காவின் பைஅத் மற்றும் இஜாஸத் பெற்ற ஃகலீஃபாவும் ஆவார்கள்.

ஸுனனே அபூதாவூத் ஹதீஸ் கிரந்தத்திற்கு  அத்துர்ருல் மன்ழூத்  என்ற விளக்கவுரை நூலை உர்தூவில் பல பாகங்களாக எழுதியுள்ளார்கள்.

ஸலவாத்துகள் மற்றும் துஆக்களுக்கான ஒரு சிறு நூலையும் தொகுத்துள்ளார்கள்,
அன்னாரது அனைத்து சேவைகளையும் பொருந்திக் கொண்டு அல்லாஹு தஆலா தனது உயர்ந்த நல்லடியார்கள் கூட்டத்தில் அன்னாரைச் சேர்ப்பானாக…

Popular

More like this
Related

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் மீண்டும் கட்டணம் அறவிடப்படும்

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 4) முதல் மீண்டும் கட்டணம் அறவிட...

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்: சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் கைகோர்ப்பு

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும்...

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...