15, 16, 17 ஆம் திகதிகளில் கடவுச்சீட்டு வழங்கும் முறையில் மாற்றம்

Date:

எதிர்வரும் ஏப்ரல் 15, 16, 17 ஆம் திகதிகளில் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

இது தொடர்பில் திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் பி.எம்.டி. நிலூஷா பாலசூரிய விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஏப்ரல் 15, 16, 17 ஆம் திகதிகளில் நண்பகல் 12.00 மணி வரை மாத்திரமே ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளைப் பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது நடைமுறையிலுள்ள 24 மணி நேர ஒருநாள் சேவையானது ஏப்ரல் 15 – 17 வரை இடம்பெறாது எனவும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள புதுவருடத்தை தொடர்ந்து தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லும் ஊழியர்களின் விடுமுறை காரணமாக, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில், 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்...

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...