இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷின் முதலாவது ஹஜ் குழு சவூதி வருகை

Date:

இந்தியா, பாகிஸ்தான் மற்றும்  பங்களாதேஷ் நாடுகளிலிருந்து இந்த ஆண்டுக்கான முதற் தொகுதி ஹஜ் யாத்ரீ­கர்கள் சவூதி அரே­பி­யா­விற்குப் பய­ண­மா­கினர்.

பங்களாதேஸிலிருந்து முதற் தொகுதி ஹஜ் யாத்ரீகர்கள் ஜெட்டாவிலுள்ள கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலை­யத்தைச் சென்­ற­டைந்தனர்.

ஜெட்டா விமான நிலை­யத்தில் சவூதி அரேபியாவில் உள்ள பங்களாதேஷ் தூதர் முகமட் டெல்வார் ஹொசைன், சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆலோசகர் மஸன் ஜவஹர், ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் இயக்குனர் சல்மான் அல் பெலாபி, மற்றும் பிற அமைச்சக அதிகாரிகள் யாத்ரீகர்களை வரவேற்றனர்.

இதேவேளை இந்தியாவிலிருந்தும் முதல் ஹஜ் குழு மதீனா சென்றடைந்தது. மதீனா விமான நிலையத்தில் இந்திய யாத்ரீகர்களின் முதல் குழுவிற்கு சவூதிக்கான இந்திய தூதுவர் டாக்டர் சுஹேல் கான் மற்றும் தூதர் ஜெனரல் ஃபஹத் சூரி ஆகியோர் அன்பான வரவேற்பு அளித்தனர்.

அவர்களுடன் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா துணை அமைச்சர் பேராசிரியர் அப்துல் அஜிஸ் ஏ. வஸ்ஸான் மற்றும் மூத்த சவூதி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு இந்தியாவில் 1,22,518 யாத்ரீகர்கள் புனித யாத்திரைக்காக புறப்படுவார்கள். முதல் ஹஜ் விமானங்களில் லக்னோவிலிருந்து 288 யாத்ரீகர்களும் ஹைதராபாத்திலிருந்து 262 யாத்ரீகர்களும் புறப்பட்டனர்.

அதேநேரம் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்திலிருந்து 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஹஜ் குழு மதீனாவுக்குப் புறப்பட்டது.

இந்த ஆண்டு, சுமார் 89,000 பாகிஸ்தானியர்கள் ஹஜ் செய்வார்கள், மேலும் 23,620 பேர் தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலம் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...