உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 14 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவு

Date:

ஒரு கோடியே 10 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள்  இதுவரை அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 11 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் நிறைவடையும் என அரச அச்சகர் பிரதீப் புஷ்ப குமார தெரிவித்தார்.

50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் கிடைக்கப்பெறவுள்ளதாக தபால் மா அதிபர் பீ. சத்குமார கூறினார்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை  இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதற்கமைய குறித்த 18 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...

அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய...

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை...