எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் உறுதியுள்ள காசா மக்கள்!

Date:

காசா பகுதியில் நடைபெறும் இஸ்ரேலிய கொடூரத் தாக்குதல்களால் அடிப்படை வசதிகளெல்லாம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றும் புத்திசாலித்தனமான முயற்சிகளால் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கின்றனர்.

சமீபத்தில் வெளியாகிய ஒரு வீடியோவில், துவிச்சக்கர வண்டியின் செயினை பயன்படுத்தி, அதன் சக்தியால் தையல் இயந்திரத்தை இயக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த இயந்திரத்தினூடாக அவர்கள் தங்களுக்கே தேவையான ஆடைகளை தைத்துக் கொள்கிறார்கள்.

மின்சாரம், எரிபொருள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் ஒரு பயங்கரமான யுத்த சூழ்நிலையை எதிர்கொண்டு, இப்படி வாழ்க்கையை முன்னெடுத்து செல்வது காசா மக்களின் உறுதி மற்றும் படைப்பு திறனை எடுத்துக்காட்டுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, காசா மக்களின் நிலைமையை மட்டுமல்லாமல், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், அதற்கான தீர்வுகளையும் உலகிற்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...