பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரிப்பு: 15 வயது சிறுவனை பாகிஸ்தான் கொடியில் சிறுநீர் கழிக்க வைத்த கும்பல்

Date:

மதவாத மனோபாவம் கொண்ட குழுவொன்று, திங்கட்கிழமை பள்ளி மாணவனான 15 வயதுச் சிறுவனை  தாக்கியதாக பரபரப்பு சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.

பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த குறித்த சிறுவன், பாகிஸ்தான் கொடியை அகற்றியதாகக் கூறி குறி வைக்கப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகளில், பாடசாலை சீருடையில் உள்ள அந்த சிறுவனை இழுத்துச் சென்று, ‘இந்துஸ்தான் ஜிந்தாபாத்’ மற்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற கோஷங்களை முழக்க வற்புறுத்தியதாக காணப்படுகிறது.

மேலும், பாகிஸ்தான் கொடியின் மீது சிறுநீர் கழிக்க வற்புறுத்தியதும் இந்தக் குழுவினரின் பயங்கரத்தன்மையை வெளிக்கொணர்கிறது.

இந்த சம்பவம், நகர காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்திற்கு அருகில் நிகழ்ந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். Times of India வெளியிட்ட செய்தியின்படி, சில காவல்துறை அதிகாரிகள் அருகிலேயே இருந்தும், தலையீடு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் ஊடக அறிக்கையின் படி, பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் ஒட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடியை அந்த சிறுவன் அறியாமலே அகற்றியதாகவும், அவனுக்குத் தெரிந்தே எதுவும் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

“நான் என் நண்பர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்தேன். சாலையில் ஏதோ ஒட்டப்பட்டிருப்பதாக அவர்கள் சொன்னதால் அதை எடுத்தேன். அப்போது அவர்கள் என்னை தாக்கினர்,” என சிறுவன் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ள நிலையில், காவல்துறை விசாரணை நடைபெறுகின்றன.

இதற்கிடையில், காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடைபெற்ற  தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து, இந்தியா முழுவதும் முஸ்லிம் மக்களுக்கெதிரான வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த வாரம் ஆக்ராவைச் சேர்ந்த 25 வயது பிரியாணி விற்பனையாளர் முகமது குல்ஃபாம், பஹல்காம் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் இதனை உறுதிப்படுத்துகிறது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...