முழு காசா பிராந்தியமும் பட்டினியின் அகோரப் பிடியில் சிக்கியுள்ளது: ஹமாஸ் அறிவிப்பு

Date:

நவீன வரலாற்றில் மிக மோசமான மனிதாபிமான பேரழிவுகளில் ஒன்றான காசா பகுதி பஞ்சத்தின் கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

மேலும் காசா பகுதியில் உள்ள எங்கள் மக்களுக்கு உடனடியாக கடவைகளைத் திறந்து தண்ணீர் உணவு, மருந்து மற்றும் நிவாரணங்களை  வழங்குமாறு நாங்கள் கோருகிறோம் என ஹமாஸ் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை காசாவில் உள்ள பேக்கரிகள் மூடப்பட்டதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க சிரமப்படுகிறார்கள். இஸ்ரேலிய முற்றுகையால் சமையலுக்கு மா, எரிபொருள் இல்லை. இரண்டு வாரங்களில் உணவு தீர்ந்துவிடும் என்று உலக உணவுத் திட்டம் எச்சரிக்கிறது.

ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்ரேல் காசாவுக்குள் செல்லும் அனைத்து மனிதாபிமான உதவிகளை துண்டித்ததால் உணவு நிலைமை ‘மிகவும் மோசமாக’ உள்ளது என்று ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்ரேல் அனைத்து உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் மனிதாபிமான உதவிகளையும் துண்டித்த பிறகு,விநியோகம் குறைந்து வருவதைக் காரணம் காட்டி, உலக உணவுத் திட்டம் காசாவில் மீதமுள்ள அனைத்து பேக்கரிகளையும் மூடியது.

மனிதாபிமான உதவி இல்லாததால், அதன் பொருட்கள் தீர்ந்து வருவதாகவும், ரொட்டி தயாரிக்கத் தேவையான கோதுமை மா இல்லை என்றும் கிடைக்கக்கூடிய அனைத்து உணவுப் பொருட்களையும் விநியோகித்துள்ளதாகவும்  துரதிர்ஷ்டவசமாக கையிருப்பு இல்லை என்றும் கடுமையான பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் என ஐ.நா. அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...