அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய அரபு நாடுகளுக்கான பயணத்தின் போது, பல ஆயுத வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், பலஸ்தீன மக்களின் துயரங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக தமிழ்நாடு மனிதநேய ஜனநாயகக்கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள், கடந்த வாரம் அரபு நாடுகளுக்கு வருகை தந்ததும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டதும்; உலகம் முழுக்க பேசு பொருளானது.
அவ்விருவரும் ட்ரம்புக்கு நிகராக பன்னாட்டு வணிகத்தில் வெற்றிகரமாக இயங்கி வருபவர்கள்.
அரசு முறை பயணத்தில் அவர்கள் வந்தது குறித்து பெரிய அளவில் வினாக்கள் எழுப்பப்படவில்லை.
சவுதி அரசுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் 142 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அது கால்குலேட்டர்களால் கூட கணக்கு சொல்ல முடியாத இந்திய ரூபாய் மதிப்பிலான தொகையாகும்.
முக்கியமாக அமெரிக்கா தயாரிக்கும் ஆயுதங்களை கொள்முதல் செய்வது இதில் பிரதானமானது.
இப்பொழுதும் அமெரிக்காவின் ஆயுதங்களை அதிகமாக கொள்முதல் செய்யும் நாடுகளில் முதலிடத்தில் சவுதி தான் இருக்கிறது.
இதே போன்ற அமெரிக்கா விற்பனை செய்யும் ஆயுதங்களை எவ்வாறு இயக்குவது என்று இஸ்ரேலுக்கு சொல்லிக் கொடுக்கப்படும்.
ஆயுதங்களை வாங்க வேண்டும்; அதை சந்தையில் விற்க வேண்டும்; அமெரிக்காவின் வணிகத்துக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பது மட்டும்தான் எழுதப்படாத விதி என கூறப்படுகிறது.
ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை விட, தற்போது உலகின் கவனத்தை கவர்ந்திருக்கும் ஆசிய நாடுகளில் முதன்மையானது அமீரகம்.
ஏற்கனவே அமெரிக்காவின் ஆயுத கொள்முதலில், அமீரகம் முக்கிய இடத்தை வகிக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
வளைகுடாவில் சவுதி மற்றும் அமீரகத்துக்கு வணிக ரீதியில் போட்டி நாடாக கத்தார் தன்னை உருவாக்கியிருக்கிறது.
வளைகுடாவின் வர்த்தக போட்டிகளையும் கடந்து, கத்தார் அரசியல் ரீதியாகவும் தன்னை உலகில் கவனத்திற்குரிய நாடாக வளர்த்து வருகிறது.
பாவம், டிரம்ப்!
வெப்பம் மிகுந்த தற்போதைய வளைகுடா வானிலையில், அவர் மிகவும் குளிர்ந்து போய்விட்டார்!
இவற்றையெல்லாம் ஊடகங்களின் வழியாக பார்த்த மக்கள் ஆச்சரியத்திலும் மூழ்கியுள்ளனர்.
இதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
இந்த நேரத்தில் பாலஸ்தீனத்தில் கடந்த வாரத்தில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி, அடுத்தடுத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
போரின் பாதிப்பால் -பட்டினியால் கதறியலும் பாலஸ்தீன குழந்தைகளை பற்றி யாருமே கவலைப்படவில்லை.
மனிதாபிமான பொருள்கள் செல்வதை தடுத்து, குழந்தைகளை பசியால் கதறவிடும் மோசமான இஸ்ரேலின் செயலுக்கு எதிராக கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் கூட்டாக இஸ்ரேலை எச்சரிக்கின்றன.
உலக நாடுகளை கெஞ்சுகிறார். இஸ்ரேலை எச்சரிக்கிறார்.
மனிதாபிமான உதவிகளை பெற்றுத் தருவார்கள்… என பாலஸ்தீனர்கள் நினைத்திருக்க கூடும்.
எனவே அரபு அரசர்களுக்கு இது பற்றி முயற்சி எடுத்திட நேரமில்லை. மிகவும் ‘பிசி’ யாக உள்ளனர்.
நாங்கள் பலாஸ்தீனர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம் என்ற பதில் அவர்களிடமிருந்து எளிதாக கிடைத்துவிடும்!
பலஸ்தீனர்களே…