மினாவில் இலங்கை ஹாஜிகள் அனைவரையும் ஒரே இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு

Date:

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் இலங்கை ஹாஜிகளை மினாவில் ஒரே இடத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் இருந்து இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள 3,500 ஹாஜிகளும் மினாவில் வலயம் 2 இல் (Zone 2) தங்க வைக்கப்படவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை இலங்கையில் இருந்து சென்றுள்ள ஹஜ் குழு உறுப்பினர்களும் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்கள அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹாஜிகள் தங்க வைக்கப்படவுள்ள இடங்களை இலங்கையில் இருந்து வந்த ஹஜ் குழு உறுப்பினர் சட்டத்தரணி TK அஸுர் , இலங்கை வக்பு சபை உறுப்பினர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SP )மாஹில் டூல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரி ஏ.எஸ்.எம்.ஜாவித், சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்தின் பதில் கொன்சியுலர் ஜெனரல் திருமதி மபுஷா லாபிர் , ஏற்பாடுகளுக்கான தூதரகத்தின் உயர் அதிகாரி Dr. அஷ்ரப் உள்ளிட்ட குழுவினர் நேற்று (19) சென்று பார்வையிட்டனர்.

ஹாஜிகளின் உணவு விநியோக ஏற்பாடுகளுக்கு பொறுப்பான ஜலால்டீன் ஹாஜி உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினரையும் சந்தித்து கலந்துரையாடப்பட்டது.

(தகவல் மினாவிலிருந்து ASM ஜாவித்)

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...