கண்டியில் பல பகுதிகளுக்கு 36 மணி நேர நீர்வெட்டு…!

Date:

கண்டியில் பல பகுதிகளுக்கு 36 மணி நேரம் நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாநகர சபையின் மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (28) பிற்பகல் 2.00 மணி முதல் 30ஆம் திகதி அதிகாலை 2.00 மணி வரை 36 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

பேராதனை வீதி, வில்லியம்கோபல்லாவ மாவத்தை, நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இருந்து நகர சபை சந்திப்பு வரை, அஸ்கிரிய, குள சுற்றுவட்டம், ரஜ பிஹில்ல மாவத்தை, பூவெலிகட, தென்னகும்புர, குருதெனிய, அம்பிட்டிய மற்றும் கண்டி நகர மையத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக கண்டி மாநகர சபையின் மாநகர சபை ஆணையாளர் தெரிவித்தார்.

கண்டி குட்ஷெட் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளின் போது நீர் விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

சேதமடைந்த நீர் விநியோக அமைப்பை சரிசெய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதால், சேமிக்கப்பட்ட நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கண்டி மாநகர சபை கோரியுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...