சென்னை இஸ்ரேலிய திரைப்பட விழா இரத்து: மஜக,மார்க்சிய, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகளின் தொடர் அழுத்தம்

Date:

இம்மாதம் 29 ஆம் திகதி சென்னையில் ICAF நிறுவனத்தினால் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்ரேலிய திரைப்பட விழா இரத்து செய்யப்படுவதாக அதனுடைய ஏற்பாட்டாளர்கள் தமக்கு அறிவித்திருப்பதாக தமிழ்நாடு மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக காசாவில் மேற்கொள்ளப்படுகின்ற தொடர் அக்கிரமங்கள் படுகொலைகள் பட்டினிச்சாவுகள் இவைகளை கருத்தில் கொண்டு இத்தகைய கொடுமைகளுக்கு இலக்காகியுள்ள சமூகத்தின் நிலையை கருத்தில் கொண்டு இந்த திரைப்பட விழா நடத்தப்படக்கூடாது என அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த திரைப்பட விழா இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை உலகின் பல பாகங்களிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இன அழிப்புக்கு எதிராக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் நடைபெறவிருந்த இஸ்ரேலிய திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, மே 29-ம் தேதி நடைபெறவிருந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் (ம.ஜ.க) போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இஸ்ரேலிய திரைப்படங்களை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என மஜக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...