முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள சுதேசிகளுக்கு ஆயுத லைசென்ஸ் வழங்க அசாம் மாநிலம் தீர்மானம்..!

Date:

பங்களாதேஷ் எல்லைக்கு அருகாமையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களிலுள்ள சுதேசிகளுக்கு ஆயுத லைசென்ஸ் வழங்குவதற்கு அசாம் மாநிலம் தீர்மானித்துள்ளது.

சுதேச மக்களின் பாதுகாப்பு கருதி இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று தெரிவித்தார்.

அசாமின் 35 மாவட்டங்களில் 11மாவட்டங்களில் முஸ்லிம்கள் செறிந்து வழ்கின்றனர். அவற்றுள் 4 மாவட்டங்கள் பங்களாதேஷ் எல்லைக்கு அருகில் இருக்கின்றன. தற்போது 6 மாவட்டங்களில் உள்ள சுதேசிகளுக்கு ஆயுதம் வைத்திருப்பதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

சுதேசிகளின் நீண்டகால கோரிக்கைக்கு பின்னர் இந்த ஆயுத லைசென்ஸுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

பங்களாதேஷ் எல்லைக் கிராமங்களில் பங்களாதேஷிலிருந்து குடியேறிய அநேகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

Popular

More like this
Related

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...