முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள சுதேசிகளுக்கு ஆயுத லைசென்ஸ் வழங்க அசாம் மாநிலம் தீர்மானம்..!

Date:

பங்களாதேஷ் எல்லைக்கு அருகாமையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களிலுள்ள சுதேசிகளுக்கு ஆயுத லைசென்ஸ் வழங்குவதற்கு அசாம் மாநிலம் தீர்மானித்துள்ளது.

சுதேச மக்களின் பாதுகாப்பு கருதி இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று தெரிவித்தார்.

அசாமின் 35 மாவட்டங்களில் 11மாவட்டங்களில் முஸ்லிம்கள் செறிந்து வழ்கின்றனர். அவற்றுள் 4 மாவட்டங்கள் பங்களாதேஷ் எல்லைக்கு அருகில் இருக்கின்றன. தற்போது 6 மாவட்டங்களில் உள்ள சுதேசிகளுக்கு ஆயுதம் வைத்திருப்பதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

சுதேசிகளின் நீண்டகால கோரிக்கைக்கு பின்னர் இந்த ஆயுத லைசென்ஸுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

பங்களாதேஷ் எல்லைக் கிராமங்களில் பங்களாதேஷிலிருந்து குடியேறிய அநேகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...