பஹல்காம் தாக்குதல் மனுவை விசாரிக்க இந்திய உயர் நீதிமன்றம் மறுப்பு!

Date:

காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க கோரிய பொதுநல மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தெரிவித்தனர்.

மேலும் விசாரணை அமைப்புகளுக்கு மன சோர்வை ஏற்படுத்தும் வகையில் மனு உள்ளது என்று கூறி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வெளி மாநிலங்களில் உள்ள ஜம்மு – காஷ்மீர் மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்ச்னை இருந்தால் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தற்போதைய நிலையில் இந்த மனுவை விசாரிக்க முடியாது. மத்திய அரசு விசாரணை செய்து வருகிறது. அப்படி இருக்கும்போது, அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டும்.

நாட்டின் மீதான பொறுப்பு உங்களுக்கும் உள்ளது என, பொறுப்பற்ற பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் ஃபதேஷ் சாஹுவுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...