துருக்கி ஜனதிபதி அர்தூகானுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்

Date:

துருக்கிய ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் திங்களன்று பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

தொலைபேசி உரையாடல் மூலம் பேசிய துருக்கி ஜனாதிபதி அர்தூகான் ட்ரம்பை நாட்டுக்கு வருகை தருமாறு அழைத்தார்.

ட்ரம்பிடம் பாதுகாப்புத் துறைத் துறையில், வாஷிங்டனுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு துருக்கி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும், காசாவில் மனிதாபிமான நெருக்கடி ‘மோசமான நிலையை’ எட்டியுள்ளது, உதவி வழங்குவதற்கும் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கும் துருக்கியின் தயார்நிலையை  அர்தூகான் ட்ரம்பிடம் வெளிப்படுத்தினார்.

போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் அணுகுமுறைக்கு ஆதரவை வெளிப்படுத்திய அர்தூகான், ஈரானுடனான பேச்சுவார்த்தை செயல்முறையிலும் ரஷ்யா-உக்ரைன் போரை தீர்ப்பதிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை துருக்கி பாராட்டுவதாகக் கூறினார்.

சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் அதன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் துருக்கி பாடுபடுவதாக அர்தூகான் மேலும் கூறினார். இந்த செயல்முறைக்கு பங்களிக்க சிரியா மீதான தடைகளை தளர்த்துவதற்கான அமெரிக்க முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

 

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...