பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் அலட்சியம் காண்பித்த அதிகாரிகள் பொறுப்புக்கூறவேண்டும்: சட்டத்தரணிகள் சங்கம்

Date:

சில பகிடிவதை சம்பவங்கள் உரிய கல்விக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் அலட்சியத்தினால் நடைபெற்றிருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளத.

மிகமோசமானதும், மனிதத்தன்மையற்றதுமான பகிடிவதையின் காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாம் மிகுந்த கவலையடைகிறோம்.

எந்தவொரு கல்வியியல் கட்டமைப்புக்களிலும் எந்தவொரு மாணவருக்கு எதிராகவும் பகிடிவதை மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அது நாட்டின் சட்டத்தை மாத்திரமன்றிஇ அடிப்படை மனிதாபிமானக் கோட்பாடுகளையும் மீறுகின்ற செயலாகும்.

அதேவேளை அண்மையகாலத்தில் பதிவான சில பகிடிவதை சம்பவங்கள் அக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் புறக்கணிப்பு அல்லது அலட்சியத்தினால் நடைபெற்றிருக்கிறது என நாம் கருதுவதுடன், அவர்களும் இச்சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

அதேபோன்று 1998 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க கல்விக்கட்டமைப்புக்களில் பகிடிவதை மற்றும் ஏனைய வன்முறை தடுப்புச்சட்டத்தின் சரத்துக்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து நாம் தீவிர கரிசனை கொண்டிருக்கிறோம். இவ்வாறான சட்டவிரோத பகிடிவதை செயற்பாடுகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர்கல்விக்கட்டமைப்புக்களின் அதிகாரிகள் முன்னெடுக்கவேண்டும்.

அத்தோடு மேற்படி சம்பவம் தொடர்பில் சமனலவௌ பொலிஸாரினால் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...