ஜேர்மனிக்கு பயணமாகிறார் ஜனாதிபதி அநுர

Date:

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜூன் 10ஆம் தி்கதி ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இதனை உறுதிப்படுத்தினார்.

“எமது சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைவதற்கு முன்பு, ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் எமது நாட்டிற்கு வந்தனர். ஆனால், இப்போது அது குறைந்துள்ளது.

 

ஜேர்மனி சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் ஈர்ப்பதற்கும், இரு நாடுகளும் இதற்கு என்ன செய்ய முடியும் என்பதையும் பார்க்க வேண்டும்.

 

பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உயர்மட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதையும் இலக்காகக் கொள்ள வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....