‘டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்’ நூல் வெளியீட்டு விழா நாளை

Date:

சிரேஷ்ட ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய ‘டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்’ என்ற நூல் வெளியீட்டு விழா நாளை 09ஆம் திகதி மாலை 04.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் ஜெஸ்மின் அரங்கில் நடைபெறவுள்ளது.

அப்றார் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் டாக்டர் ரயீஸ் முஸ்தபா தலைமையில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு நிகழவில் பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூஸூப் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்கள் கௌரவ அதிதியாகவும் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அல்ஹாஜ் அஸாத் சாலி அவர்களும் கலந்து கொள்வார்கள்.

நூல் பற்றிய கருத்துரையை ஆசிரியையும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழக வருகை தரு விரிவுரையாளருமான திருமதி சுமையா ஷரிப்தீன் வழங்கவுள்ளார்.

ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான ஏ.எல்.ஏ. அஸீஸ் அவர்கள் ‘நூல் கடந்த நோக்கு’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.

ஏற்புரைகளை டாக்டர் ஷாபி சிஹாப்தீன் ,  நூலாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் ஆகியோர் நிகழ்த்துவார்கள். வரவேற்புரையை செல்வி ஸெய்னப் ஷாபி நிகழ்த்தவுள்ளார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...