நாடளாவிய ரீதியில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை முறைப்பாடுகள் !

Date:

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள  தீவிர வானிலை காரணமாக இதுவரை 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்தடை தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவிக்கையில்,

வியாழக்கிழமை (29) இரவு 8 மணி முதல் சனிக்கிழமை (31) காலை 8 மணி வரையான 36 மணிநேரத்தில், மின் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு 55,940 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 17,460 முறைப்பாடுகள் சீர் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் 31 வீதமான மின்தடைகள் சீர்செய்யப்பட்டுள்ளன என்றார்.

மின்தடைகள் குறித்து 1987 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கோ அல்லது CEBCare என்ற கையடக்கத்தொலைபேசி செயலி மூலமாகவோ முறைப்பாடு செய்யுமாறு இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...