இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தாக்குதலில் மனிதநேய பணியாளர்கள் ஐவர் கொல்லப்பட்டனர்: IHH துருக்கி நிவாரண அமைப்பு கண்டனம்

Date:

காசா நகரத்தில் உள்ள அல்-நஃபாக் பகுதியில் துருக்கி இஸ்தான்புல்லை தலைமையிடமாகக் கொண்ட  IHH மனிதாபிமான நிவாரண அறக்கட்டளையின் திட்ட பணிப்பாளர் முகமது அல்-மபாயீத் கொல்லப்பட்டார்.

உலக உணவுத் திட்டத்துடன் IHH மனிதாபிமான நிவாரண அறக்கட்டளை இணைந்து காசாவில் உள்ள பலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முயன்றபோது, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து மனிதநேய பணியாளர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காசா திட்டத்தில் பணிபுரியும் மனிதநேய பணியாளர்களான முகமது அல்-முபாயித், அகமது போஸ்டன், மொட்டாஸ் ரஜாப், இஷாக் அல்-தாயிஃப் மற்றும் ஜமால் அல்-மபாயீத், தாக்குதல்களில் கொல்லப்பட்டதுடன் இருவர் கடுமையாக காயமடைந்ததாக IHH மனிதாபிமான நிவாரண அறக்கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காசாவில் பலஸ்தீனியர்களுக்கு உதவி வழங்குவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் மனிதாபிமான ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட ‘கொடூரமான தாக்குதல்’ எனவும் ‘கடவுள் தியாகிகள் மீது கருணை காட்டட்டும், அவர்களின் குடும்பங்களுக்கும் பொறுமையை வழங்கட்டும் எனவும் IHH அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...