ஆயுத மோதல் முடிவடைந்ததையிட்டு தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் சமாதான நிகழ்வு

Date:

இலங்கையில் ஆயுத மோதல் முடிவடைந்த 16வது ஆண்டு நிறைவையொட்டி தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் நிர்வாகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதான நிகழ்வு நேற்று (19) அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் நிர்வாகக் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை மூன்று மொழிகளிலும் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வுக்கு நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் நல்லிணக்க சங்க உறுப்பினர்களை ஒன்லைனில் இணைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தீபங்களை ஏற்றி, உறுதிமொழிகளை எடுத்த பிறகு,பௌத்த, இந்து கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் ஆரோக்கியமான சமுதாயத்திற்கான தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கினர்.

தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலஃபர், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் (தேசிய ஒருங்கிணைப்பு) கே. மகேசன், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி சமன்குமாரி, காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம், நீதி அமைச்சின் தேசிய ஒருங்கிணைப்பு பிரிவு மற்றும் அரச கரும மொழிகள் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவர் விஜித் ரோஹன, ஆரோக்கியமான சமூகம் மற்றும் ஆரோக்கியமான உலகம் குறித்து உரையாற்றினார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...