மினாவில் இலங்கை ஹாஜிகள் அனைவரையும் ஒரே இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு

Date:

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் இலங்கை ஹாஜிகளை மினாவில் ஒரே இடத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் இருந்து இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள 3,500 ஹாஜிகளும் மினாவில் வலயம் 2 இல் (Zone 2) தங்க வைக்கப்படவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை இலங்கையில் இருந்து சென்றுள்ள ஹஜ் குழு உறுப்பினர்களும் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்கள அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹாஜிகள் தங்க வைக்கப்படவுள்ள இடங்களை இலங்கையில் இருந்து வந்த ஹஜ் குழு உறுப்பினர் சட்டத்தரணி TK அஸுர் , இலங்கை வக்பு சபை உறுப்பினர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SP )மாஹில் டூல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரி ஏ.எஸ்.எம்.ஜாவித், சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்தின் பதில் கொன்சியுலர் ஜெனரல் திருமதி மபுஷா லாபிர் , ஏற்பாடுகளுக்கான தூதரகத்தின் உயர் அதிகாரி Dr. அஷ்ரப் உள்ளிட்ட குழுவினர் நேற்று (19) சென்று பார்வையிட்டனர்.

ஹாஜிகளின் உணவு விநியோக ஏற்பாடுகளுக்கு பொறுப்பான ஜலால்டீன் ஹாஜி உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினரையும் சந்தித்து கலந்துரையாடப்பட்டது.

(தகவல் மினாவிலிருந்து ASM ஜாவித்)

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...