கடல் கடந்தும் இலங்கை மக்களுக்காக சேவை செய்த செய்யித் ஹமீத் மௌலானா மறைந்தார்

Date:

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அரை நூற்றாண்டு காலமாக இருந்து இலங்கை மக்களுக்கும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கும் தொண்டாற்றிய செய்யித் ஹமீத் மௌலானா தனது 91 ஆவது வயதில் நேற்றிரவு இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

1975 இல் ரியாதில் கால் பதித்த இவர், ஹோட்டல் விநியோகங்களுக்கென தனியான கம்பெனி ஒன்றை நிறுவி ரியாதின் பெரும் வர்த்தகப் புள்ளியாக மாறினார்.

ஐந்து தசாப்தங்களாக சவூதிக்காக நியமிமிக்கப்படும் அனைத்து இலங்கைத் தூதுவர்களுடனும் இணைந்து தனது செல்வத்தின் மூலமும் செல்வாக்கின் மூலமும் இலங்கையருக்கு பெரும் தொண்டாற்றினார்.

தனது X தளத்தில் இலங்கை பற்றிய செய்திகளைப் பரிமாறி வந்த இவர் பல்வேறு கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

வெலிகமையை பிறப்பிடமாகக் கொண்ட செய்யித் ஹமீத் மௌலானா முன்னாள் மேல் மாகாண ஆளுநர் செய்யித் அலவி மௌலானாவின் மருமகனுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து ரியாதில் நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...