கடல் கடந்தும் இலங்கை மக்களுக்காக சேவை செய்த செய்யித் ஹமீத் மௌலானா மறைந்தார்

Date:

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அரை நூற்றாண்டு காலமாக இருந்து இலங்கை மக்களுக்கும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கும் தொண்டாற்றிய செய்யித் ஹமீத் மௌலானா தனது 91 ஆவது வயதில் நேற்றிரவு இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

1975 இல் ரியாதில் கால் பதித்த இவர், ஹோட்டல் விநியோகங்களுக்கென தனியான கம்பெனி ஒன்றை நிறுவி ரியாதின் பெரும் வர்த்தகப் புள்ளியாக மாறினார்.

ஐந்து தசாப்தங்களாக சவூதிக்காக நியமிமிக்கப்படும் அனைத்து இலங்கைத் தூதுவர்களுடனும் இணைந்து தனது செல்வத்தின் மூலமும் செல்வாக்கின் மூலமும் இலங்கையருக்கு பெரும் தொண்டாற்றினார்.

தனது X தளத்தில் இலங்கை பற்றிய செய்திகளைப் பரிமாறி வந்த இவர் பல்வேறு கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

வெலிகமையை பிறப்பிடமாகக் கொண்ட செய்யித் ஹமீத் மௌலானா முன்னாள் மேல் மாகாண ஆளுநர் செய்யித் அலவி மௌலானாவின் மருமகனுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து ரியாதில் நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...