சென்னை இஸ்ரேலிய திரைப்பட விழா இரத்து: மஜக,மார்க்சிய, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகளின் தொடர் அழுத்தம்

Date:

இம்மாதம் 29 ஆம் திகதி சென்னையில் ICAF நிறுவனத்தினால் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்ரேலிய திரைப்பட விழா இரத்து செய்யப்படுவதாக அதனுடைய ஏற்பாட்டாளர்கள் தமக்கு அறிவித்திருப்பதாக தமிழ்நாடு மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக காசாவில் மேற்கொள்ளப்படுகின்ற தொடர் அக்கிரமங்கள் படுகொலைகள் பட்டினிச்சாவுகள் இவைகளை கருத்தில் கொண்டு இத்தகைய கொடுமைகளுக்கு இலக்காகியுள்ள சமூகத்தின் நிலையை கருத்தில் கொண்டு இந்த திரைப்பட விழா நடத்தப்படக்கூடாது என அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த திரைப்பட விழா இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை உலகின் பல பாகங்களிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இன அழிப்புக்கு எதிராக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் நடைபெறவிருந்த இஸ்ரேலிய திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, மே 29-ம் தேதி நடைபெறவிருந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் (ம.ஜ.க) போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இஸ்ரேலிய திரைப்படங்களை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என மஜக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...